கோலாலம்பூர், டிச 3 – கிரேப் வாகன ஓட்டுனரிடம் கொள்ளையிட முயன்றதாக 13 வயதுடைய பையன் ஒருவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. சுங்கைப்பட்டாணி மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் Khairatul Animah Jelani முன்னிலையில் கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அந்த பதின்ம வயது பையன் மறுத்தான். வாடகை கார் ஓட்டுனரை கத்தி முனையில் அந்த பையன் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் தொடர்பான 32 வினாடிகளைக் கொண்ட காணொளி இதற்கு முன் சமூக வலைத்தளத்தில் வைரலானது. தமது பெற்றோருடன் நீதிமன்ற அறைக்கு வந்தபோது அந்த பையன் அமைதியாக காணப்பட்டான்.
இம்மாதம் 27 ஆம் தேதி Sungai Petani Taman Keladi யில் மாலை மணி 6 அளவில் வாடகை கார் ஓட்டுனரான 65 வயதுடைய Lee Ang Hie என்பவரிடம் கொள்ளையிட முயன்றதாக குற்றவியல் சட்டத்தின் 393ஆவது விதியின் கீழ் அந்த பையன் மீது குற்றச்சாட்டு கொண்டுவரப்பட்டது. இந்த குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் அவனுக்கு ஏழு ஆண்டுகள்வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் அந்த பையனுக்கு 2,000 ரிங்கிட் ஜாமின் அனுமதிக்கப்பட்டது.