கோலாலம்பூர், டிச 15 – 6 வயது சிறுவன் ஜெய்ன் ரய்யான் அப்துல் மதின் காணாமல்போனதாக கூறப்பட்ட 5 மணி நேரத்திற்குப் பின்னரும் அவன் உயிருடன் இருந்துள்ளதாக சிலாங்கூர் போலீஸ் தலைவர டத்தோ ஹுசைன் ஒமார் கான் தெரிவித்திருக்கிறார்.
பெட்டாலிங் ஜெயா, இடமான் அடுக்குமாடி குடியிருப்பில் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5 மணியளவில் ஜெய்ன் ரய்யானை இரு சாட்சிகள் பார்த்துள்ளனர் என அவர் கூறினார்.
அடுக்குமாடி வீட்டின் முற்றத்தில் டிசம்பர் 5ஆம் தேதி மாலை 5மணிக்கும் மற்றும் 5.30 மணிக்குமிடையே இரண்டு சிறுவர்கள் பார்த்துள்ளனர் என ஹுசைன் ஒமார் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 5ஆம் தேதி மதியம் 12.30 மணியளவில் ஜெய்ன் காணாமல்போனதாக தகவல் வெளியான 5 மணி ரேத்திற்குப் பின்னர் அவன் உயிருடன் இறந்துள்ளதை அந்த இருவரின் சாட்சிகள் உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார்.