Latestஇந்தியா

மகளின் திருமணத்திற்கு விருந்தாளிகளுக்கி ஹெல்மெட்டை பரிசாக வழங்கிய தந்தை

கோர்பா, பிப் 7 – பொதுவாகவே திருமண விழாவில் பங்கேற்பவர்களுக்கு விருந்து கொடுத்து, பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கமாகி விட்டது. அதில் கோர்பா நாட்டை சேர்ந்த ஒருவர் மகளின் திருமணத்திற்கு வந்த விருத்தினர்களுக்கு வழக்கத்துக்கு மாறான ஒரு பரிசை வழங்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

அதாவது, திருமணத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்த விருந்தினர்களுக்கு மணமகளின் தந்தை ஹெல்மெட்டை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “என் மகளின் திருமணம், சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் சிறந்த நிகழ்வாக அமைய வேண்டும் என விரும்பினேன். உயிர் என்பது விலைமதிப்பற்றது என்றும், குடித்துவிட்டு வாகனம் ஓட்ட வேண்டாம் என்றும் விருத்தினர்களை கேட்டுக்கொண்டேன்.

மேலும், திருமண விழாவில் குடும்பத்தினர் 12 பேர் இணைந்து ஹெல்மெட் அணிந்து நடனம் ஆடியும் விருத்தினர்களை உற்சாகப்படுத்தினோம். இருசக்கர வாகனங்களில் வந்திருந்த 60 பேருக்கு இனிப்புகளுடன் ஹெல்மெட் வழங்கினேன்” என்று மகிழ்வுடன் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!