Latestமலேசியா

ஊராட்சி மன்ற தேர்தலை அம்னோ ஏற்கவில்லை, விவாதம் தேவையில்லை – அஷ்ராப் வஜ்டி

கோலாலம்பூர், டிச 27 – ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தலை அம்னோ ஏற்கவில்லை. எனவே, அது குறித்த விவாதங்கள் நடத்துவது தேவையில்லை என அம்னோ தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ராப் வஜ்டி டுசுகி தெரிவித்திருக்கிறார்.

அம்னோவைச் சேர்ந்த அமைச்சர்கள் கூட ஊராட்சி மன்றத்திற்கான தேர்தல் தேவையில்லையென அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ஊராட்சி மன்றங்களில் தேர்தல் நடத்துவதாக இருந்தால் சட்டத்திருத்தம் செய்ய வேண்டியுள்ளது. இது தவிர அனைத்து தரப்பினரின் இணக்கம் தேவையாகும் . எனவே, ஊராட்சி மன்றங்களுக்கு தேர்தல் தேவையில்லையென என்பதே அம்னோவின் நிலைப்பாடாகும் என அஷ்ராப் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!