
ஈப்போ, மே 19 – இம்மாதம் 13 ஆம்தேதி தெலுக் இந்தானில் நிகழ்ந்த கோர விபத்தில் கலகத் தடுப்பு போலீஸ்கார்களில் ஒன்பது பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த லோரி ஓட்டுனரான ரூடி சுல்கர்னைன் ( Rudi Zulkarnain ) இன்று போலீஸ் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவருக்கான ஜாமின் தொகை 6,000 ரிங்கிட்டை அவர் வேலை செய்யும் சிலாங்கூரிலுள்ள நிறுவனத்தின் நிர்வாகம் செலுத்தியதைத் தொடர்ந்து அவர் விடுதலை செய்யப்பட்டார். குற்றஞ்சாட்டப்பட்ட நபர் இன்று காலையில் தெலுக் இந்தான் நீதிமன்றத்தில் ஜாமின் தொகையை செலுத்திவிட்டதாக ஹிலிர் பேரா மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் ஜைனால் அபிடின் தெரிவித்தார்.
சுல்கைர்னைனுக்கான ஜாமின் தொகையை அவர் வேலை செய்யும் நிர்வாகம் மற்றும் நண்பர்கள் வழங்கிய நிதி உதவியாலும் திரட்டப்பட்டதாக கூறப்பட்டது. ஆபத்தான முறையில் மற்றும் பொமக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனம் ஓட்டியதன் மூலம் கலகத் தடுப்பு பிரிவைச் சேர்ந்த 9 போலீஸ்காரர்கள் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக மே 16 ஆம் தேதி அந்த லோரி ஓட்டுநருக்கு எதிராக 9 குற்றச்சாட்டுக்கள் நீதிபதி நூர் ஹமிஷா முன்னிலையில் கொண்டு வரப்பட்டன. அந்த குற்றச்சாட்டை அவர் மறுத்து விசாரணை கோரியிருந்தார்.