ஜொகூர் பாரு, டிசம்பர் 6 – ஜொகூர், செடெனாக்கில், சாலையில் பயணித்துக் கொண்டிருந்த காரில் திடீரென தீப்பற்றியது.
எனினும், விரைந்து செயல்பட்ட கூலாய் தீயணைப்பு மீட்புப் படை வீரர்களின் உதவியோடு, அக்காரின் ஓட்டுனர் காப்பாற்றப்பட்டார்.
அச்சம்பவம் நேற்று மாலை மணி 4.17 வாக்கில் நிகழ்ந்தது. சாலையில் பயணித்துக் கொண்டிருந்த BMW ஆடம்பரக் காரில் திடீரென தீ மூண்டது.
அதனால், அக்கார் 90 விழுக்காடு எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. எனினும், ஓட்டுனர் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினார். தீக்கான காரணம் ஆராயப்பட்டு வருகிறது.