Latestமலேசியா

கோலா கெலவாங்கிலுள்ள தனது வீட்டின் அறையில்மாணவி இறந்து கிடந்தா

ஜெலுபு , அக் 13 –

எஸ்.பி.எம் தேர்வு எழுதவிருக்கும் மாணவி ஒருவர் கோலா கெலவாங்கிலுள்ள தனது வீட்டிலுள்ள அறையில் இறந்து கிடந்தார்.

17 வயதுடைய அந்த மாணவியின் உடல் அவ்வீட்டிலுள்ள அறை ஒன்றில் சனிக்கிழமையன்று கண்டுப்பிடிக்கப்பட்டதாக நெகிரி செம்பிலான் மாநில போலீஸ் தலைவர் அப்ஷப்னி அகமட் (Alzafny Ahmad ) தெரிவித்தார்.

இந்த சம்பவம் குறித்து குவாலா கெலவாங் போலீஸ் நிலையத்தின் முகப்பிடப் பிரிவுக்கு ஜெலுவு மருத்துவமனையின் அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்துள்ளது.

அந்த மாணவியின் பெற்றோருக்கு சொந்தமான வீட்டின் மேல் மாடியிலுள்ள கதவு உள்ளே பூட்டப்பட்ட நிலையில் இருந்த அறையில் அப்பெண் இறந்து கிடந்தார்.

அங்கு எந்தவொரு குற்றச்செயலும் நடந்ததற்கான அல்லது அப்பெண் எவருடனும் மோதலில் ஈடுபட்டதற்காக அறிகுறி எதுவும் காணப்படவில்லை.

அதோடு அவரது தனிப்பட்ட பொருட்கள் எதுவும் காணமல்போகவில்லை என்ற தகவலையும் Alzafny தெரிவித்தார். அம்மாணவி இறந்ததை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!