Latestமலேசியா

UPSI பேருந்து விபத்து: ஓட்டுநருக்கு 18 சம்மன்கள்; அதில் 13 வேகக்கட்டுப்பாட்டு சம்மன்கள்

கெரிக் பேராக், ஜூன் 10 – கடந்த திங்கட்கிழமை, பேராக் கெரிக், தாசிக் பந்திங் அருகேயுள்ள கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலையில் (JRTB) நடந்த சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த (UPSI) மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுநருக்கு மொத்தம் 18 சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளதென்று முதல் கட்ட விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

அந்த 18 சம்மன்களில், வேக கட்டுப்பாட்டை மீறி வாகனத்தைச் செலுத்தியதற்கு 13 சம்மன்கள் வழங்கப்பட்டுள்ளதென்று புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறை (JSPT) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பாஸ்ரி தெரிவித்துள்ளார்.

அந்த ஓட்டுனருக்கு, சீட் பெல்ட் அணியாததற்காகவும், ‘பிரேக்’ விளக்கு இல்லாததற்காகவும், இதற்கு முன்பு விபத்தொன்றில் சிக்கியதற்காகவும் சம்மன்கள் அனுப்பப்பட்டுள்ளது என்றும் விபத்துக்குள்ளான பேருந்திற்கு 21 சம்மன்கள் கிடைக்கப்பெற்றுள்ளதென்றும் அறியப்படுகின்றது.

இந்நிலையில், இச்சம்பவத்திற்கு முன்பே அந்த ஓட்டுநர் பல்வேறு சாலை விதி மீறல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை காண முடிகின்றதென்று யூஸ்ரி கூறியுள்ளார்.

இந்த விபத்து குறித்து விசாரிக்க, மலேசிய காவல்துறையினர் சிறப்புப் பணிக்குழுவை அமைக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!