Latestமலேசியா

குயானா கடற்பகுதியில் 133 பேருடன் சென்ற படகு மூழ்கியதில் பலரைக் காணவில்லை

ஜார்ஜ்டவுன், ஜூலை-20-தென் அமெரிக்காவின் குயானா நாட்டின் கடல் பகுதியில் 133 பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் சென்ற படகொன்று நீரில் மூழ்கியதில், குறைந்தது 67 பேர் மீட்கப்பட்டனர்.

எனினும் பலர் காணாமல் போயிருக்கின்றனர். மீட்கப்பட்டவர்களில் 41 ஆண்கள், 11 பெண்கள். எஞ்சிய 15 பேர் குழந்தைகள்.

MV Barima எனும் அந்தப் படகு பயணிகள் மற்றும் பணியாளர்களுடன் ஜார்ஜ்டவுனிலிருந்து Port Kaituma நோக்கிச் சென்று கொண்டிருந்த பொது நீரில் கவிழ்ந்தது.

அவசர அழைப்பு கிடைத்து கடலோரக் காவல் படை, விமானப்படை, மீன்பிடிப் படகுகள், தனியார் விமானங்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்புப் பணி தொடங்கப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அச்சம்பவத்திற்கு இயந்திரக் கோளாறு அல்லது அதிகப்படியான சுமை காரணமல்ல. கடல் நீர் மட்டம் உயர்ந்ததால் அவ்வாறு நிகழ்ந்திருக்கலாம் என நம்பப்படுவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.இதனிடையே காணாமல் போனவர்களை மீட்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!