
புத்ரா ஜெயா, மே 2 – பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கொசோவோ குடியரசு அதிபர் டாக்டர் விஜோசா ஒஸ்மானி-சாத்ரியுவிடமிருந்து ( Vijosa Osmani Sadriu )
( Order of Independence ) விருதைப் பெற்றார். கொசோவோ நாட்டின் விடுதலைக்கு ஆற்றிய பங்கிற்காக வழங்கப்படும் இந்த விருது அந்நாட்டின் பொது உயரிய விருதாகும்.
கொசோவோவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்குப் பிந்தைய வளர்ச்சிக்காகப் போராடுவதில் மலேசியாவின் வலுவான ஆதரவையும், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதில் பிரதமரின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டது.
கடந்த 2008ஆம் ஆண்டு அக்டோபர் 30 ஆம் தேதியன்று கொசோவோவின் சுதந்திரத்தை அங்கீகரித்த முதல் நாடுகளில் மறைந்த துன் அப்துல்லா தலைமையிலான மலேசியாவும் ஒன்றாகும்
கொசோவோவின் வரலாற்றில் ஒரு முக்கியமான தருணத்தில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, மலேசியாவின் ஐந்தாவது முன்னாள் பிரதமர் மறைந்த துன் அப்துல்லா அகமது படாவிக்கும் Order of Independence விருதை அதிபர் Osmani வழங்குவார்