
கோலாலம்பூர், மே 30 – தனது தாயாரை சில ரசிகர்கள் அமதித்ததை அடுத்து தான் ஆபாசமாக சைகை செய்ததாக மென்செஸ்டர் காற்பந்து விளையாட்டாளர் அமாட் டியாலோ ( Amad Diallo ) கூறிக்கொண்டார். புதன்கிழமை புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டரங்கு மைதானத்தில் ஆசியான் ஆல்-ஸ்டார்ஸ் அணியுடன் மென்செஸ்டர் யுனைடெட் கிளப் மோதியது. இந்த ஆட்டத்தில் Asian All Stars குழு 1 -0 என்ற கோல் கணக்கில் மென்செஸ்டர் யுனைடெட் குழுவை வீழ்த்தியது. All Stars அணிக்கான வெற்றி கோலை மியான்மரின் மவுங் மவுங் ல்வின் 71வது நிமிடத்தில் அடித்தார். தான் அப்படி நடந்துக்கொள்ளக்கூடாது என்றாலும் , தனது செயல்களுக்கு வருத்தப்படவில்லையென Amad Diallo இதற்கு முன் X தளத்தில் பதிவிட்டார்.
எனக்கு மக்கள் மீது மரியாதை உண்டு, ஆனால் என் அம்மாவை அவமதிப்பவர்களுடன் அல்ல என அவர் கூறினார். நாங்கள்
மலேசியாவில் நல்ல மக்களுடன் சிறந்த நேரத்தைக் கழித்தோம் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இந்த சம்பவம் கலவையான எதிர்வினைகளை ஏற்படுத்தியது, சிலர் டயல்லோவுக்கு ஆதரவை தெரிவித்தனர், மற்றவர்கள் அந்த விளையாட்டாளரை Manchester United கண்டிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.
@hrfuturesnq என்ற பயனர் இந்த சம்பவத்தின் ஒரு சிறிய வீடியோவை “Bayar RM1,500 untuk dapat jari tengah (நடுவிரலைப் பெற RM1,500 செலுத்தப்பட்டது). ஏன் அமத் ஏன்?” என்ற தலைப்பில் இடுகையிட்டார்.