Latestமலேசியா

சிங்கப்பூர் முன்னாள் போக்குவரத்து அமைச்சரின் ஊழல் சிறைத் தண்டனை முடிவுக்கு வந்தது

சிங்கப்பூர், ஜூன் 6 – முன்னாள் சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் எஸ். ஈஸ்வரனின் தண்டனை காலம் முடிவுற்றது என்று உள்ளூர் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் தண்டனை தொடங்கிய பின்னர் ஈஸ்வரன் 4 மாதங்கள் தொடர்ந்து சிறையில் இருந்த நிலையில், அவர் மீண்டும் குற்றம் செய்யும் அபாயம் குறைவாக இருப்பதால் இவ்வாண்டு பிப்ரவரி மாதம் தொடங்கி அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தார்..

சிங்கப்பூரின் பெரும்பான்மை பங்குதாரரான ஓங் பெங் செங் மற்றும் கட்டுமான நிர்வாகி லம் கோக் செங் ஆகியோரிடமிருந்து மதிப்புமிக்க பொருட்களை ஈஸ்வரன் ஏற்றுக்கொண்டது தொடர்பான குற்றச்சாட்டுகளில் மேற்கண்ட தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!