சிரம்பான், மே 24 – நெகிரி செம்பிலான், செனாவாங், தாமான் பண்டார் செனாவாங்கில், இரு சிறு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த பெண்ணின் உயிரை சிறிதும் பொருட்படுத்தாமல், அவரிடம் கொள்ளையிட்டு தப்பிச் சென்ற ஆடவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த அந்த ஆடவன், அப்பெண்ணின் கை வளையலை பறித்துக் கொண்டு மாயமானதாக, சிரம்பான் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் முஹமட் ஹத்தா சே டின் தெரிவித்தார்.
அச்சம்பவம் நேற்று நண்பகல் மணி 12.30 வாக்கில் நிகழ்ந்தது.
இரு பிள்ளைகளுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்த 33 வயது பெண்ணை நெருங்கிச் சென்ற ஆடவன் ஒருவன், அவரின் கை வளையலை பறித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டான்.
எனினும், அச்சம்பவத்தில், அப்பெண் அதிஷ்டவசமாக கீழே விழாமல் சுதாகரித்துக் கொண்டதால், அவரும் பிள்ளைகளும் காயம் எதுவும் இன்றி உயிர் தப்பினர்.
முன்னதாக, அச்சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகியதை போலீஸ் அடையாளம் கண்டுள்ளதாக ஹத்தா சொன்னார்.
அந்த வழிபறி கொள்ளை தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் போலீசாரை தொடர்புக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.