பெக்கான் ஜூன் 20 – பாஹாங், ஜாலான் குவாந்தான் – செகாமாட் சாலையில், பிளாஸ்டிக் தடுப்புகளை வைத்து மூடப்பட்டிருந்த, குழியில் மோதியதில் லோரி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு மணி 8.55 வாக்கில் நிகழ்ந்த அவ்விபத்தில், 29 வயது முஹமட் பர்ஹான் தகாங் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை, பெக்கான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் சைடி மாட் ஜின் உறுதிப்படுத்தினார்.
சம்பவத்தின் போது, ஜோகூரிலுருந்து, ஜெனரேட்டர் பெட்டிகளை ஏற்றி கொண்டு பெக்கான் நோக்கி பயணமான அந்த லோரி விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது.
சம்பவ இடத்தை சென்றடைந்ததும், அந்த லோரி கட்டுப்பாட்டை இழந்து, குழியில் மோதி விபத்துக்குள்ளானது.
குழி இருப்பதை கவனிக்காததால், லோரி ஓட்டுனர் அதில் மோதி விபத்துக்குள்ளாகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.
அதனால், 1987-ஆம் ஆண்டு போக்குவரத்து சட்டத்தின் கீழ், அவ்விபத்து விசாரிக்கப்படுகிறது.