Latestமலேசியா

தம்பினில் மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் மீது வழக்கு பதிவு

சிரம்பான் – ஜூன் 13 – கடந்த மாதம், தம்பின் பகுதியிலுள்ள இடைநிலைபள்ளியொன்றில் ஆண் ஆசிரியர் ஒருவர், அப்பள்ளியில் பயிலும் 14 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

கடந்த மே 17 ஆம் தேதியன்று, ரெம்பாவ் விரைவுச்சாலையில் பயணித்து கொண்டிருந்த வாகனமொன்றில் அக்குற்றம் நிகழ்ந்ததென்று அறியப்படுகின்றது.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்ட அந்த ஆசிரியர் நீதிபதியின் முன்னிலையில் தனது குற்றத்தை மறுத்துள்ள நிலையில் நீதிமன்றம் அவருக்கு உத்தரவாதங்களுடன் கூடிய 12,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்துள்ளது.

பாலியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அக்குற்றம் நிரூபிக்கப்பட்டால் 20 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!