Latestமலேசியா

பாயான் லெப்பாஸில் ஆட்டுக் கொட்டகையில் தீ; 19 ஆடுகள் பலி, வாகனங்கள் சேதம்

பயான் லெப்பாஸ், ஜூன்-3 – பினாங்கு பாயான் லெப்பாஸ், லெங்கோக் கம்போங் ஜாவாவில் ஆட்டுக் கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில், 19 ஆடுகள் உடல் கருகி மாண்டன.

நேற்று மதியம் 12 மணி வாக்கில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

ஆட்டுக் கொட்டகை 90 விழுக்காடு தீயில் அழிந்துபோனது.

20 ஆடுகளில் ஒன்று மட்டுமே தப்பி உயிர் பிழைத்தது.

சம்பவ இடத்தருகே நிறுத்த வைக்கப்பட்டிருந்த Honda City, Honda Civic, Proton Wira, 1 டன் லாரி உள்ளிட்ட சில வாகனங்களும் தீயில் சேதமடைந்தன.

ஆனால் மனித உயிர் சேதம் ஏதுவும் பதிவாகவில்லை என, தீயணைப்பு-மீட்புத் துறை கூறியது.

தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!