
கோலாலம்பூர், ஜூன் 18 – கோலாலம்பூர் புடு எல்.ஆர்.டி நிலையத்தின்
கழிவறைக்குள் இருந்த பெண்ணை காணொளி எடுக்க முயன்ற குற்றத்திற்காக மியன்மார் ஆடவனுக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 100 ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது. அகதிகளுக்கான ஐ.நா ஆணைக்குழுவின் அடையாள அட்டையை வைத்திருந்த 20 வயதுடைய Nur Farahan Nur Arfam என்ற இளைஞன் குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து கூடியபட்ச அபராதமாக 100 ரிங்கிட் விதிப்பதாக மாஜிஸ்திரேட் Farah Nabihah Muhamad Dan தீர்ப்பளித்தார்.
சிறு குற்றங்கள் சட்டத்தின் 14ஆவது பிரிவின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டில் அபராத தொகையை செலுத்தத் தவறினால் 5 நாட்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி அந்த இளைஞனுக்கு மஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஜூன் 3ஆம் தேதி எல்.ஆர்.டி நிலையத்தின் பெண்கள் கழிப்பறையில் மாலை மணி 5.30 அளவில் Nur Farhan இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.