
பாகான் டத்தோ, ஜூன்-28 – பேராக், ஊத்தான் மெலிந்தாங்கில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 21 வீடுகள், 1 கடை மற்றும் 1 சீனக் கோயில் அழிந்துபோயின.
அதிகாலை 4.30 மணிக்கு மேல் தகவல் கிடைத்து ஊத்தான் மெலிந்தாங் மற்றும் தெலுக் இந்தானிலிருந்து தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடம் விரைந்தன.
அப்போதே 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருந்தது.
வீடுகள் ஒன்றோடு ஒன்று மிக மிக நெருக்கத்தில் கட்டப்பட்டிருந்ததும், தீயணைப்புக் குழாயிலிருந்து தண்ணீரின் அழுத்தம் குறைவாக இருந்ததும், தீயை அணைக்கும் முயற்சிக்கு கடும் சவாலாக அமைந்தன.
ஒருவழியாக காலை 7.30 மணிக்கு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, காலை 10.45 மணிக்கு அப்பணிகள் நிறைவடைந்தன.
எனினும் அத்தீயில் யாருக்கும் காயமோ உயிர் சேதமோ ஏற்படவில்லை.
தீக்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் வேளை, சேத விவரங்களும் மதிப்பிடப்பட்டு வருகின்றன