Latestமலேசியா

மலாக்காவில் மணல் உறிஞ்சும் சாதனத்தில் சிக்கிகொண்ட குத்தகை தொழிலாளி மரணம்

கோலாலம்பூர், மே 7 -மலாக்கா Pulau Gadong கிலுள்ள வீடமைப்பு கட்டுமான பகுதியில் மணல் உறிஞ்சும் சாதனம் சம்பந்தப்பட்ட விபத்தில் மியன்மார் குத்தகை தொழிலாளியான ஆடவர் ஒருவர் மரணம் அடைந்தார்.

இன்று காலை மணி 11.56 அளவில் அவசர அழைப்பு கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்து சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு ஏழு தீயணைப்பு வீரர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக மலாக்கா தெங்கா தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கை அதிகாரி இஸ்மாயில் ஹருன் தெரிவித்தார்.

வேலை செய்துகொண்டிருந்தபோது மணல் உறிஞ்சும் சாதனத்தில் சிக்கிக் கொண்ட தொழிலாளி இறந்துவிட்டதை மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். இதனைத் தொடர்ந்து அந்த இயந்திரத்திலிருந்து அந்த தொழிலாளியின் உடலை மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!