Latestமலேசியா

மலேசியாவில் 32 பகுதிகளில் காற்றின் தரம் மோசம்; பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-25-மலேசியாவில் புகைமூட்டம் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று காலை நிலவரப்படி நாடு முழுவதும் 32 பகுதிகளில் காற்றுத் தூய்மைக்கேடு குறியீட்டு அளவு (API) ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளது.

​சுற்றுச்சூழல் துறையின் APIMS தரவுகளின்படி, சிலாங்கூரில் ஷா ஆலாம், நெகிரி செம்பிலானில் சிரம்பான் மற்றும் பேராக்கில் தைப்பிங் உள்ளிட்ட பல பகுதிகள் 100-க்கும் மேற்பட்ட ஆரோக்கியமற்ற குறியீட்டு அளவை பதிவுச் செய்துள்ளன.

​காற்றின் தரக் குறியீடு 101 முதல் 200 வரை இருப்பது ஆரோக்கியமற்ற அளவாகக் கருதப்படுகிறது.

எனவே, ​பொது மக்கள் வெளிப்புற உடற்பயிற்சிகள் மற்றும் நடமாட்டங்களைக் குறைத்துக் கொள்ளுமாறும், வெளியே செல்லும் போது முகக்கவசம் அணியுமாறும், போதுமான அளவு தண்ணீர் குடிக்குமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!