Latestமலேசியா

பாயான் லெபாஸில் கட்டுமான கிரேன் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல்

பாலேக் பூலாவ், மே-16 – பினாங்கு, பாயான் லெப்பாஸ், கம்போங் செரோனோக்கில் இன்று காலை 25 டன் எடையுள்ள கட்டுமானக் கிரேன் சரிந்து விழுந்தது.

வீடமைப்புக் கட்டுமானத் தளத்திலிருந்து விழுந்த கிரேனின் ஒரு பகுதி, ஜாலான் பெர்மாத்தாங் டாமார் சாலையை மறைத்துகொண்டது.

இதனால், காலை 9 மணி முதல் போக்குவரத்து நிலைக் குத்தியதாக, பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்ருல் மஹாதீர் அசிஸ் தெரிவித்தார்.

சட்டமன்றக் கூட்டத்தை முடித்துகொண்டு அவசர அவசரமாக சம்பவ இடத்தைச் சென்று பார்வையிட்ட போது, வாகனங்கள் ஸ்தம்பித்து போயிருந்தன; இதையடுத்து DOSH எனப்படும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையின் உதவியோடு அங்கு சோதனை மேற்கொண்டதில், பிரேக் கோளாறே கிரேன் விழுந்ததற்குக் காரணம் என கண்டறியப்பட்டதாக அஸ்ருல் சொன்னார்.

உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை; கிரேன் ஓட்டுநர் மட்டும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

போலீஸ், தீயணைப்பு மற்றும் மீட்புப் படை, பொது தற்காப்புப் படை ஆகியவற்றியுன் உதவியுடன் கிரேன் அப்புறப்படுத்தப்பட்டு, பிற்பகல் 2 மணிக்கு சாலை மீண்டும் போக்குவரத்து திறந்து விடப்பட்டதாக அஸ்ருல் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!