
கோலாலம்பூர், ஏப்ரல்-27- ஃபெங் ஷுய் சீன வாஸ்து பரிகார மாஸ்டரின் ஆலோசனைப் பெற்ற பினாங்கு ஆடவருக்கு, மெக்னம் 4D ஜேக்போட் குலுக்குச் சீட்டில், 11.88 மில்லியன் ரிங்கிட் பரிசுத் தொகை விழுந்திருக்கிறது.
அந்த அதிர்ஷ்டக்காரர், ஏப்ரல் 5-ஆம் தேதி பட்டவொர்த், சுங்கை பெஞுவில் உள்ள மெக்னம் கடையில், 185/25 என்ற குலுக்குச் சீட்டை வாங்கியுள்ளார்.
அவரின் டிக்கெட் 11.8845 மில்லியன் ரிங்கிட் பரிசுப் பணத்தைத் தட்டிச் சென்றது.
பண ரீதியாக அதிர்ஷ்டத்தை அதிகரிக்க ஃபெங் ஷுய் மாஸ்டரைப் போய்ப் பார்க்குமாறு நண்பர் ஒருவர் அவரிடம் ஆலோசனைக் கூறியுள்ளார்.
அந்த வாஸ்து பரிகார மாஸ்டரோ, “உங்கள் மருமகனின் அதிர்ஷ்ட எண் மீது பந்தயம் கட்டுங்கள்” என மிக எளிய ஆலோசனை வழங்கினார்.
அதையே அவரும் பின்பற்ற, இன்று ஒரே நாளில் கோடீஸ்வரராகியுள்ளார் அந்நபர்.
வாழ்க்கையை மாற்றியுள்ள இந்த பரிசுப் பணத்தின் மூலம் தனது மனைவியை அழைத்துக் கொண்டு அவர் ‘கனவு’ சுற்றுலா சென்றுள்ளார்.
இருந்த கடன் அனைத்தையும் அடைத்து விட்டு தற்போது நிம்தியான வாழ்க்கையை அவர் வாழத் தொடங்கியுள்ளார்.