Latestமலேசியா

சாலை விபத்தில் தாய் பலி; தந்தையும் 6 வயது மகளும் காயம்

பெந்தோங், நவம்பர்-10,

பஹாங், பெந்தோங் அருகே காராக் – கோலாலம்பூர் நெடுஞ்சாலையில் நேற்று காலை ஏற்பட்ட விபத்தில், ஒரு குடும்ப மாது உயிரிழந்தார்.

அவரின் கணவரும், 6 வயது மகளும் காயங்களுடன் உயிர் தப்பினர்.

36 வயது கணவர் கோலாலம்பூரிலிருந்து குவாந்தான் நோக்கி ஓட்டிச் சென்ற கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரமாக தடம்புரண்டு கால்வாயில் விழுந்து, பின்னர் சுழன்றடித்து சாலையில் குப்புறக் கவிழ்ந்தது.

இதில், முன்பக்க பயணி இருக்கையில் அமர்ந்திருந்த அவரின் 31 வயது மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கணவருக்கு சிராய்ப்புக் காயங்கள் ஏற்பட்ட நிலையில், 6 வயது மகளுக்கு கை எலும்பு முறிந்து, தலையிலும் காயமேற்பட்டது.

அச்சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ள பெந்தோங் போலீஸ், நேரில் பார்த்த சாட்சிகள் இருந்தால் தகவல் கொடுத்து உதவுமாறு கேட்டுக் கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!