சிங்கப்பூரில் நிர்வாணமாக போலீஸ்காரர்களை கத்தியால் வெட்டிய ஆடவர் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுகிறார்

சிங்கப்பூர், ஏப்ரல்-19- சிங்கப்பூரில் நிர்வாணக் கோலத்தில் போலீஸ்காரர்களைக் கத்தியால் தாக்கிய இளைஞன் மீது, இன்று நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படுகிறது.
வியாழக்கிழமையன்ற Hougang Avenue 8 குடியிருப்புப் பகுதியில் பிற்பகல் 1 மணிக்கு மேல் அச்சம்பவம் நிகழ்ந்தது.
திறந்தவெளி கார் நிறுத்துமிடத்தில் நிர்வாணமாக சுற்றித் திரிந்த ஆடவன், வாகனங்களைச் சேதப்படுத்தினான்.
பிறகு 30 வயது ஆடவரை அவன் கத்தியால் தாக்கினான்.
அதோடு நிற்காமல், கையில் கிடைத்த ஆணிப் பலகையை எடுத்துக் கொண்டு அருகிலுள்ள பேருந்து நிறுத்துமிடத்தையும் அவன் சேதப்படுத்தினான்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் வந்துசேர்ந்த போலீஸார் அவனைக் கைதுச் செய்ய முயன்றனர்.
ஆனால், அவர்களையும் ஆணிப் பலகையால் அவன் தாக்கியதில் 3 போலீஸ்காரர்கள் காயமடைந்தனர்.
கடும் போராட்டத்திற்குப் பிறகு அவனைக் கைதுச் செய்து போலீஸார் கொண்டுச் சென்றனர்.
அபாயகரமான ஆயுதத்தால் வேண்டுமென்றே காயம் விளைவித்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவ்விளைஞனுக்கு அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
முன்னதாக கத்தி வெட்டுக்கு ஆளான ஆடவர் கையில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரையும், அவரின் 3 வயது மகனையும் தாக்குதல்காரனிடமிருந்து பாதுகாத்த பொது மக்களில் ஒருவரான Shari Mohd என்பவருக்கும் சிங்கப்பூர் போலீஸ் பாராட்டுத் தெரிவித்தது.
ஆபத்தான நேரத்தில் விரைந்து செயல்பட்டு உயிர் காத்ததற்காக அவருக்கு ‘பொது மனப்பான்மை விருதும்’ வழங்கப்படுகிறது.