Latestமலேசியா

சீன சுற்றுப்பயணிகளின் மரணம் தொடர்பில் பினாங்குத் தீவு நகரான்மைக் கழகம் உட்பட அறுவர் மீது ரி.ம 20 மில்லியன் இழப்பீடு வழக்கு

ஜோர்ஜ் டவுன் – ஜூன் 13 – பினாங்கு பெரணக்கான் மாளிகையின் கார் நிறுத்துமிடத்தில் கடந்த ஆண்டு மரம் விழுந்து சீனாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுப் பயணிகள் மரணம் அடைந்த சம்பவம் தொடர்பில் அவர்களது குடும்பத்தினர் அலட்சியத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் காரணமாக பினாங்கு தீவு நகரான்மைக் கழகமான (MBPP) உட்பட ஆறு தரப்பினருக்கு எதிராக 20 மில்லியன் ரிங்கிட் இழப்பீடு வழக்குத் தொடுத்துள்ளனர். இன்று பினாங்கு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தங்கள் வழக்கு மனுவில் 69 வயதான Liu Zhu மற்றும் 36 வயதான Liu Xinxin சின் ஆகியோரின் வாழ்க்கைத் துணைவர்களான Yang xueli மற்றும் Wang Gengfeng பொது, சிறப்பு மற்றும் முன்மாதிரியான இழப்பீடாக 1.75 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகாமன தொகையை கோரினர். கடந்த ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதியன்று நடந்த துயரச் சம்பவத்தைத் தடுக்க பிரதிவாதிகள் நியாயமான நடவடிக்கைகளை எடுக்கத் தவறிவிட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.

இந்த வழக்கில் அருங்காட்சியக நடத்துனரான பினாங்கு பெரணக்கான் மாளிகை Sdn Bhd, நில உரிமையாளர் SSM Capital Sdn Bhd, அண்டை சொத்து உரிமையாளர் ஸ்ரீ குமரனின் டெக்ஸ்டைல் ​​SDn Bhd, சுற்றுலா நிறுவனமான Pony Holiday Sdn Bhd, வேன் ஓட்டுநர் ஹார் குவாய் லெங் மற்றும் MBPP ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர். வழக்கமான ஆய்வுகளை நடத்தத் தவறியது மற்றும் சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மரத்தை அகற்றுவதற்கான அறிவிப்பை மட்டும் வெளியிட்டது உள்ளிட்ட பல தோல்விகளை MBPP-யின் உரிமைகோரல் அறிக்கை கோடிட்டுக் காட்டுகிறது. மறைந்த Xinxin-க்கு அவரது குடும்பத்தினர் 1.13 மில்லியன் ரிங்கிட்டை அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோருகின்றனர்.
Liu Zhu-க்கு, எதிர்பார்க்கப்படும் ஓய்வூதிய வருமான இழப்பு, மற்றும் முன்மாதிரியான சேதங்கள் உட்பட 464,829 ரிங்கிட்டை அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!