புத்ராஜெயா, ஏப்ரல்-29, சுகாதார அமைச்சின் அங்கீகாரம் பெறாத அழகுச் சாதன பொருட்கள் மற்றும் சருமப் பராமரிப்புப் பொருட்களை இணையம் வாயிலாக விற்று வந்த கும்பலின் தலைவியான இந்தோனேசிய மாது கைதாகியுள்ளார்.
50 வயது அப்பெண்ணை குடிநுழைவுத் துறை கைதுச் செய்தது.
அதோடு, கோலாலம்பூரில் Setapak மற்றும் சிலாங்கூர் Ampang-ஙில் மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையில் முறையே 25, 35 வயதுடைய இந்தோனேசிய ஆடவரும் பெண்ணும் கைதாகினர்.
அப்பொருட்களை இணையம் வாயிலாக அவர்கள் விளம்பரம் செய்து வந்தவர்கள் எனக் கூறப்படுகிறது.
அக்கும்பலிடம் இருந்து பல்வேறு வர்த்தக முத்திரையிலான அழகுச் சாதனப் பொருட்கள், ரொக்கம் உள்ளிட்டவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
சுமார் 6 மாதங்களாக இணையம் வாயிலாக அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது.
அவ்விவகாரம் தொடர்பில் உள்ளூர் ஆடவர் ஒருவரையும் குடிநுழைவுத் துறை விசாரணைக்கு அழைத்திருக்கிறது.