Latestமலேசியா

நாடு முழுவதும் MyKad அச்சிடும் சேவையில் இன்று முதல் 31 வரை தற்காலிகத் தடை

புத்ராஜெயா, ஆகஸ்ட்-Mykad printing nationwide to face disruptions from today till 31​புதியத் தலைமுறை அடையாள அட்டைக்கு மாறும் பணிகள் நடைபெற்று வருவதால், நாடு முழுவதும் MyKad அச்சிடும் சேவையில் இன்று, ஆகஸ்ட் 26 முதல் 31-ஆம் தேதி வரை தற்காலிகத் தடை ஏற்படும் என தேசியப் பதிவிலாகாவான JPN அறிவித்துள்ளது.

​தற்போதுள்ள MyKad கட்டமைப்பில் இருந்து மேம்படுத்தப்பட்ட புதிய அடையாள அட்டைக்கு மாறும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதே இந்த சேவைத் தடைக்குக் காரணமாகும்.

எனவே, ​அவசரத் தேவை இல்லாத பொது மக்கள், இந்த இடைப்பட்ட காலத்தில் அடையாள அட்டை மாற்றம் அல்லது புதுப்பித்தல் விண்ணப்பங்களைத் தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

​அதே சமயம், 12 வயது சிறுவர்களுக்கான முதல் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்கும் பெற்றோர்கள், புதியத் தலைமுறை MyKad விநியோகம் தொடங்கும் வரை சிறிது காலம் காத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!