Latestமலேசியா

ஸ்தாப்பாக்கில் உயிரிழந்த பள்ளி மாணவியின் அக்காவை பாலியல் வன்கொடுமை செய்த சந்தேகத்தில் 51 வயது ஆடவர் கைது

கோலாலம்பூர், ஆகஸ்ட்-26,கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் அண்மையில் 14 வயது பள்ளி மாணவி மரணமடைந்தது தொடர்பான விசாரணையில், அவரது மூத்த சகோதரியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சந்தேகிக்கப்படும் 51 வயது நபர் ஒருவரை போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

​பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாயாரின் ஆண் நண்பரான அந்த சந்தேக நபர், ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ Fadil Marsus உறுதிப்படுத்தினார்.

​பாதிக்கப்பட்ட 15 வயதுடைய மூத்த சகோதரி அளித்த தகவல்கள் அடிப்படையில், 2017-ஆம் ஆண்டு சிறார் பாலியல் வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் போலீஸார் விசாரணை அறிக்கையைத் திறந்துள்ளனர்.

​முன்னதாக, ஆகஸ்ட் 18-ஆம் தேதி ஜாலான் லங்காவியிலுள்ள தனது வீட்டில் இருந்து அதிகாலை நேரத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட 14 வயது மாணவி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

​அவரது மரணப் பின்னணியில் ஏதேனும் துன்புறுத்தல்கள் இருந்ததா என்பது குறித்தும் போலீஸார் விசாரித்து வரும் நிலையில், இதுவரை 90-க்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலங்கள் பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!