
வத்திகன் சிட்டி, மே-9,- அமெரிக்காவைச் சேர்ந்த 69 வயது ரோபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் (Robert Francis Prevost), கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புதியப் போப்பாண்டவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
‘போப்பாண்டவர் 14-ஆம் லியோ’ என அவர் இனி அழைக்கப்படுவார்.
கத்தோலிக்கத் திருச்சபையின் 2,000 ஆண்டு கால வரலாற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவர் போப்பாண்டவாராகியிருப்பது இதுவே முதன்முறையாகும்.
புதியப் போப்பாண்டவரைத் தேர்ந்தெடுப்பதற்காக வத்திகன் சிட்டியில் சிஸ்டைன் சேப்பல் தேவாலயத்தில் கடந்த 2 நாட்களாக 133 கார்டினல்கள் இரகசிய வாக்கெடுப்பில் பங்கெடுத்து வந்தனர்.
முன்மொழியப்படும் ஒருவர் குறைந்தது 89 வாக்குகள் அதாவது மூன்றில் இரு பங்கு ஆதரவைப் பெற்றால் மட்டுமே பேப்பாண்டவராக தேர்வு செய்யப்படுவார்.
இந்நிலையில் முதலிரு வாக்கெடுப்புகளிலும் புதியப் போப் தேர்வு செய்யப்படாததால், தேவாலயத்தில் பொருத்தப்பட்ட புகைப்போக்கியிலிருந்து கரும்புகை வெளியானது.
நேற்றிரவு மீண்டும் இரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டதில், ரோபர்ட் பிரிவோஸ்ட் தேர்வானார்.
புதியப் போப்பாண்டவர் தேர்வானதைக் குறிக்கும் வகையில் புகைப்போக்கியிலிருந்து வெள்ளைப் புகை வெளியானது.
இதனால் தேவாலயத்திற்கு வெளியே ஆவலுடன் காத்திருந்த மக்கள் மகிழ்ச்சியில் ஆர்ப்பரித்தனர்.
தேவாலயத்தின் பால்கனியில் வந்து நின்று அவர்களை நோக்கி கையசைத்த போப்பாண்டவர் 14-ஆம் லியோ, “உங்கள் அனைவருக்கும் நலம் உண்டாகட்டும்” என ஆசி வழங்கினார்.
கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் மதத் தலைவரான போப்பாண்டவர் பிரான்சிஸ் ஏப்ரல் 21-ஆம் தேதி காலமானதை தொடர்ந்து, அடுத்து புதிய போப் தேர்வாகியுள்ளார்