
ஈப்போ, மே 30 – சுங்கை சிப்புட் Kampung Perlop 1 இல் பேரா வனவிலங்கு மற்றும் பூங்கா துறையான பெர்ஹிலித்தான் வைத்த கூண்டில் 90 கிலோ எடையுள்ள ஆண் புலியொன்று வெற்றிகரமாக சிக்கியது. கிராம குடியிருப்பு பகுதியிலிருந்து 700 மீட்டர் தொலைவில் வைக்கப்பட்டிருந்த அந்த கூண்டில் அதிகாலை மூன்று மணியளவில்
2 வயதுடைய அந்த புலி சிக்கியது. வேட்டைக்கு வைக்கப்பட்ட கூண்டில் அந்த புலி சிக்கியதை கிராமவாசி ஒருவர் தெரிவித்தாக பேரா பெர்ஹிலித்தான் இயக்குநர் யூசோப் ஷாரிப் ( Yusoff Shariff ) கூறினார்.
இதன் மூலம் கிராமவாசிகளின் கவலைகள் ஓரளவு தீர்ந்துள்ளதால் அவர்கள் வழக்கமாக தங்களது பல்வேறு பணிகள் மற்றும் செயல் நடவடிக்கைகளில் ஈடுபட முடியும் என அவர் தெரிவித்தார். முன்னதாக, கம்போங் பெர்லோப் 1 மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிப்பவர்கள், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து அந்தப் பகுதியில் புலி சுற்றித் திரிந்து, குடியிருப்பாளர்களின் கால்நடைகளைத் தாக்குவது கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் கவலையில் இருந்து வந்தனர். பிடிபட்ட புலி நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதோடு , நாட்டில் இந்த விலங்குகளின் எண்ணிக்கை அழிந்து வருவதைத் தடுக்க இனப்பெருக்கம் செய்வதற்காக (பேராக்) சுங்காயில் உள்ள தேசிய வனவிலங்கு மீட்பு மையத்திற்கு அந்த புலி அனுப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டது .