
மலாக்கா, ஜூன் 9 – கடந்த 2023ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம், கிளேபாங் மலாக்கா தெங்காவில், 14 வயது சிறுமியைப் பாலியல் ரீதியாக துன்புறுத்திய 70 வயது ஆடவன் மீது, இன்று அயர் கெரோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது..
பாலியல் குற்றத்தைப் புரிந்ததாக சந்தேகிக்கப்படும் அந்த வயோதிகன், நீதிபதியின் முன் தனது குற்றத்தை மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றங்கள் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் அவ்வழக்கு ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டால், 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் சவுக்கடி விதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகமுள்ளது.
இந்நிலையில், அக்குற்றவாளிக்கு கூடுதல் நிபந்தனைகளுடன் நீதிமன்றம் 10,000 ரிங்கிட் ஜாமீன் தொகையை விதித்துள்ள நிலையில் அவ்வழக்கு வருகின்ற ஜூலை 16ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.