Latestமலேசியா

அரசாங்கக் கொள்கைகளை மக்களிடம் கொண்டுசேர்க்க தமிழ் ஊடகங்களுக்குப் பயிற்சி

போர்டிக்சன், மே-18- அரசாங்கத் திட்டங்களும் கொள்கைகளும் மக்களிடையே குறிப்பாக இந்தியர்களிடையே போய் சேருவதில், ஊடகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன. அதற்கு ஊடகத்துறையினர் குறிப்பாக இந்திய ஊடகத்துறையினர் அதற்கேற்ப திறன்களை கொண்டிருப்பதோடு கால மாற்றத்துக்கு ஏற்பவும் தொழில்நுட்ப வளரசிக்கு ஏற்பவும் மேம்படுத்திக் கொள்வது அவசியம்.

இதனைக் கருத்தில் கொண்டு தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் ஆலோசனையின் பேரில் தமிழ் ஊடகங்களுக்கு நெகிரி செம்பிலான் போர்டிக்சனில் மே 14 முதல் 16 வரை 3-நாள் ஊடகப் பயிற்சி ஏற்பாடு ஒன்று செய்யப்பட்டது.

தமிழ் ஊடக உள்ளடக்கத்தை உருவாக்குவதில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான பாடநெறி எனும் அப்பயிற்சியை, தொடர்புத் துறை அமைச்சின் கீழுள்ள துன் அப்துல் ரசாக் ஒளிபரப்பு மற்றும் தகவல் கழகமான IPPTAR வழிநடத்தியது.

அரசாங்க, தனியார், மற்றும் மின்னியல் தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 18 பேர் அதில் பங்கேற்றனர்.

இந்திய ஊடகவியலாளர்களுக்கு அமைச்சின் கீழ் இதுபோன்ற இப்பயற்சி நடத்தப்பட்டிருப்பதாக இதுவே முதன் முறையென, IPPTAR கல்விப் பிரிவின் தலைவர் எஸ். குமரன் கூறினார்.

MoJo என்றழைக்கப்படும் திறன்பேசி ஊடகம் அதாவது கைப்பேசி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உள்ளடக்கங்களை விரைவாகவும் ஆக்கப்பூர்வமாகவும் தயாரிப்பது எப்படி என்பது பற்றியும் பங்கேற்பாளர்களுக்கு விளக்கப்பட்டது.

ஊடகத்தில் நெறிமுறைகள் மற்றும் பொறுப்புணர்வு குறித்து தேசிய செய்தி நிறுவனமான பெர்னாமாவின் தலைமை செய்தியாசிரியர் அருள் ராஜு துரை ராஜு பயிற்சியளித்தார்.

இதனிடையே,பயிற்சி மூன்று நாள் என்றாலும் கற்றுக் கொடுக்கப்பட்டது நிறைய என்றும், அதே சமயத்தில் சக ஊடகத்துறையினரிடையே ஒரு நட்புறவை ஏற்படுத்தும் ஒரு களமாகவும் இப்பயிற்சி அமைந்ததாக ஏற்பாட்டுக்குக் குழுவைச் சேர்ந்த சசிதரன் தெரிவித்தார்.

இதனை வருடாந்திர நிகழ்வாகவும் நடத்திட உத்தேசிக்கப்பட்டிருப்பதாக, அவ்வமைச்சின் தொலைத் தொடர்பு உட்கட்டமைப்புப் பிரிவுத் துணைத் தலைமைச் செயலாளர் மனோ வீரபத்ரன் தெரிவித்தார்.

பயிற்சியின் இறுதியில் பங்கேற்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்ட நிலையில் இந்த 3 நாள் பயிற்சி அனுபவத்தை பங்கேற்பாளர்கள் சிலர் வணக்கம் மலேசியாவுடன் பகிர்ந்துகொண்டனர்.

அடிக்கடி மாறிவரும் தொழில்நுட்ப வளர்ச்சிகு ஏற்ப ஊடகவியலாளர்கள் தங்கள் திறனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்படும் பயிற்சிகளுக்கு தமிழ் ஊடகங்களின் ஊக்கமளிக்கும் ஆதரவு தொடருமென எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டுக்குக்குழு தெரிவித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!