Latestமலேசியா

ஆற்றோரத்தில் புல் மேய்ந்த ஆடு, முதலை இழுத்துச் சென்றதால் இடையர் அதிர்ச்சி

மலாக்கா, மே 16 – ஆற்றோரத்தில் புல் மேய்ந்துகொண்டிருந்த ஆடு திடீரென முதலையினால் இழுத்துச் செல்லப்பட்டதால் அதனை மேய்த்து வந்த இடையர் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானார். ஆற்று நீரிலிருந்து வெளிவந்த முதலையை தாம் உடனடியாக கவனிக்க தவறிவிட்டதாக 24 வயதுடைய Muhammad Nur Iman Ahmad தெரிவித்தார்.

Melaka, Sungai Malim- மில் நடந்த இந்த சம்பவத்தினால் அந்த ஆட்டின் உரிமையாளரான தனது முதலாளிக்கு சுமார் 2,000 ரிங்கிட் இழப்பு ஏற்பட்டதாக அவர் கூறினார். 2 வயதுடைய Boer இன வகையைச் சேர்ந்த அந்த ஆடு Sungai Malim கரையோரத்தில் மேய்ந்து கொண்டிருந்தபோது கண் இமைக்கும் நேரத்திற்குள் முதலை நீருக்குள் இழுத்துச் சென்றதாக அவர் கூறினார். ஏற்கனவே இந்த ஆற்றில் முதலை இருப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்த போதிலும் அவர்களால் அதனை கண்டறிய முடியவில்லையென Muhammad Nur விவரித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!