
கோலாலம்பூர், மே 19 –
கோலாலம்பூர், மே 19 – சில உயர்கல்வி நிறுவன (IPT) மாணவர்கள் இணையத்தில் ‘கால் கேர்ல்’ அதாவது விலைமாதர்கள்ப்சேவைகளை வழங்கி, ஒரு சந்திப்பிற்கு 2,000 ரிங்கிட் முதல் 4,000 ரிங்கிட் வரை கட்டணம் வசூலிப்பதாக திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
விரைவான வருமானம் மற்றும் ஆடம்பர வாழ்க்கை ஆசையால் சிலர் இந்த செயல்களில் ஈடுபடுவதாகவும், ரகசியமாக முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சேவைகள் வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
இணைய தளங்கள் மற்றும் சில செயலிகள் மூலம் இந்த நடவடிக்கைகள் நடைபெறுவதால், போலிஸ் இந்நடவடிக்கையை கண்டறிவது கடினமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.



