
தைப்பிங், மே-30,
பேராக், கமுந்திங் நோக்கிச் செல்லும் சாலையில் நேற்றிரவு விரைவுப் பேருந்து திடீரென தீப்பற்றிக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எனினும் தீயணைப்பு-மீட்புத் துறை வருவதற்குள் பேருந்திலிருந்த அனைத்து 28 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேறி தங்களைக் காப்பாற்றிக் கொண்டனர்.
தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயைக் கட்டுப்படுத்தியதாக, பேராக் தீயணைப்பு-மீட்புத் துறையின் உதவி இயக்குநர் Sabarodzi Nor Ahmad கூறினார்.
தீ ஏற்பட்டதற்கான காரணம் கண்டறியப்பட்டு வருகிறது.