
ஜகார்த்தா, ஜூலை-8 – இந்தோனேசியாவுக்கு 3-நாள் அதிகாரப்பூர்வப் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜாவா தீவில் உள்ள சுமார் 1,000 ஆண்டுகள் பழமையான பிராம்பானன் கோயில் வளாகத்திற்குச் சென்று வழிபாடு நடத்தினார்.
இந்தோனேசிய அதிபர் பிராபோவோ சுபியாந்தோவுடன் இணைந்து, மோடி இந்தத் தொன்மையான இந்து கோயிலுக்குச் சென்றார்.
சிவன், விஷ்ணு மற்றும் பிரம்மா ஆகியோருக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த வழிபாட்டுத் தலத்தின் பிரம்மாண்டத்தை அவர் வியந்து பாராட்டினார்.
இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையே கலாச்சார உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில், இந்தக் கோயில் வளாகத்தைப் பாதுகாக்கவும், புதுப்பிக்கவும் இரு நாடுகளும் இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளன.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு தலைவர்களுக்கும் இடையே பரிமாறப்பட்டது.
9-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிராம்பானன், தென்கிழக்காசியாவின் இரண்டாவது மிகப்பெரிய இந்து கோயில் வளாகமாகும்.
யுனெஸ்கோ உலக பாரம்பரியத் தளமான இது, இந்தியா மற்றும் இந்தோனேசியா இடையிலான பண்டைய கடல்வழி வர்த்தகம் மற்றும் கலாச்சாரப் பரிமாற்றத்திற்குச் சிறந்த சான்றாகும்.



