Latestஉலகம்

இயந்திரத்தில் கோளாறு: ஹைதராபாத்துக்கே திரும்பிய MAS விமானம்

ஹைதராபாத், ஜூன்-20, 100 பயணிகளுடன் இந்தியாவின் ஹைதராபாத்தில் இருந்து கோலாலம்பூருக்குப் புறப்பட்ட தனது விமானமொன்று இயந்திரக் கோளாறுக்கு ஆளானதை, Malaysia Airlines உறுதிபடுத்தியுள்ளது.

இன்று அதிகாலை ஹைதராபாத்தில் இருந்து புறப்பட்ட MH199 விமானத்தில் திடீரென நடுவானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

இதனால் புறப்பட்ட இடமான ராஜீவ் காந்தி அனைத்துலக விமான நிலையத்திற்கே திரும்பி, உள்ளூர் நேரப்படி 3.21 மணிக்கு அது பாதுகாப்பாகத் தரையிறங்கியது.

பயணிகளும், விமானப் பணியாளர்களும் உடனடியாகப் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

அவர்கள் இன்னொரு விமானத்தின் மூலம் பயணத்தைத் தொடர்ந்ததாக Malaysia Airlines அறிக்கையொன்றில் கூறியது.

இயந்திரக் கோளாறுக்கு ஆளான விமானம் மேல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

அதிகாலை 12.45 மணிக்குப் புறப்பட்ட அவ்விமானத்தின் ஓர் இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டு தீப்பொறி கிளம்பியதாக, விமான நிலைய அதிகாரிகளை மேற்கோள் காட்டி Times of India முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!