Latestமலேசியா

ஈப்போவில், தலையில் காயத்துடன் இறந்து கிடந்த தாய் ; விசாரணைக்காக மகன் கைது

ஈப்போ, ஜூன் 13 – பேராக், ஈப்போ, அஞ்சோங் பெர்சாம் உத்தாராவிலுள்ள (Anjung Bercham Utara), வீடொன்றில், பெண் ஒருவர் தலையில் காயத்துடன் இறந்து கிடந்த சம்பவம் தொடர்பில், விசாரணைக்காக அவரது மகன் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.

அந்த 30 வயது ஆடவர், சிறுநீர் பரிசோதனைக்காக கைதுச் செய்யப்பட்டதை ஈப்போ போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் அபாங் ஜைனால் அபிடின் அபாங் அஹ்மாட் (Abang Zainal Abidin Abang Ahmad) உறுதிப்படுத்தினார்.

எனினும், அதனை ஒரு கொலைச் சம்பவமாக வகைப்படுத்தும் தடையம் எதுவும் கிடைக்கவில்லை என ஜைனால் கூறியுள்ளார்.

அதனால், அதனை ஒரு திடீர் மரணமாக போலீஸ் வகைப்படுத்தியுள்ளது.

முன்னதாக, 60 வயது பெண் ஒருவர், தலையில் காயத்துடன், வீட்டின் வரவேற்பு அறை கதவுக்கு பின்னால் இறந்து கிடப்பது குறித்து போலீசுக்கு தகவல் வழங்கப்பட்டது.

உயிரிழந்த பெண்ணின் சடலம்,சவப் பரிசோதனைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் (Raja Permaisuri Bainun) மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!