
வாஷிங்டன், மே 20 – ஈரானின் மீனாப் (Minab) நகரிலுள்ள பள்ளி ஒன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் சுமார் 155 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு அமெரிக்கா மீண்டும் நேரடியாக பொறுப்பேற்காமல் தவிர்த்துள்ளது.
அந்த பள்ளி IRGC ஏவுகணை தளத்தின் அருகில் இருந்ததால் விசாரணை சிக்கலாக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி நடந்த தாக்குதலில் 73 ஆண் மாணவர்கள், 47 பெண் மாணவர்கள், 26 ஆசிரியர்கள் உள்ளிட்ட 155 பேர் உயிரிழந்ததாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இந்த தாக்குதலுக்கு அமெரிக்காவின் ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக New York Times மற்றும் CNN செய்தி வெளியிட்டிருந்தாலும், அமெரிக்கா இதுவரை அதிகாரப்பூர்வமாக பொறுப்பை ஏற்கவில்லை.
இந்த விசாரணை முடிந்த பிறகு அதன் தகவல்கள் வெளியிடப்படுமென அமெரிக்க மத்திய கட்டளைப் படை (CENTCOM) தளபதி, Brad Cooper தெரிவித்தார்.



