Latestமலேசியா

கலைஞர் சத்தியாவுக்கு சிறிய பக்கவாதம்; உடல் நலம் சீராகி இன்று வீடு திரும்பலாம்

கோலாலம்பூர், ஜூலை-17, சிறிய அளவிலான பக்கவாதத்திற்கு ஆளான நாட்டின் மூத்த நகைச்சுவைக் கலைஞர் சத்தியாவின் உடல்நலம் தற்போது சீராக இருக்கின்றது.

இன்றே அவர் வீடு திரும்ப அனுமதிக்கப்படலாமென அவரின் மூத்த மகள் விக்னேஸ்வரி நாயர் கூறியதாக BH Online செய்தி வெளியிட்டுள்ளது.

நேற்று காலை வீட்டில் பசியாறிக் கொண்டிருந்த போது, அப்பாவுக்கு திடீரென வலது கை மற்றும் கால் மரத்துப் போனது.

இதையடுத்து செத்தாப்பாக், ஸ்ரீ ரம்பாயில் உள்ள கிளினிக்கிற்கு அவரைக் கொண்டுச் சென்றோம்; அங்கு அவருக்கு குறைந்த இரத்த அழுத்தப் பிரச்னை இருப்பது உறுதிச் செய்யப்பட்டது.

பக்கவாதத்தின் விளைவாக அப்பிரச்னை ஏற்பட்டதாகவும் உடனடியாக கோலாலம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லுமாறுக் கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும் விக்னேஸ்வரி சொன்னார்.

முதலில் அவசர சிகிசைப் பிரிவில் சிவப்புப் பகுதியில் அனுமதிக்கப்பட்டிருந்த தந்தையின் உடல்நிலை தற்போது சீராகி, இன்றே அவர் வீடு திரும்பலாமென எதிர்பார்க்கப்படுவதாக விக்னேஸ்வரி மேலும் கூறினார்.

ஏற்கனவே இது போன்ற பிரச்னைக்கு ஆளாகியிருக்கும் சத்தியா, நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் போன்றவற்றாலும் பாதிக்கப்பட்டவர் ஆவார்; ஆனால் அவைக் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது என்றார் அவர்.

சத்தியா பெரியசாமி என்ற இயற்பெயரைக் கொண்ட சத்தியா 1985-ஆம் ஆண்டுகளில் கலைத்துறையில் நுழைந்து, தொலைக்காட்சி நகைச்சுவைத் தொடரான பீ மாய் பீ மாய் தாங் தூ ( Pi Mai Pi Mai Tang Tu) மூலமாக ஒட்டு மொத்த மலேசியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக இன்றளவும் வலம் வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!