Latestமலேசியா

கிளந்தானில் வீட்டில் தீ; தனியாக வசித்து வந்த மூதாட்டி பலி

கிளந்தான்,ஜூலை 13 – தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி ஒருவர்,நேற்று இரவு 7.30 மணியளவில் கோத்தா பாரு, கம்போங் புகிட், வாகாஃப் பாருவில் நிகழ்ந்த தீவிபத்தில் சிக்கி மரணமடைந்தார்.

அந்த மூதாட்டியின் உடல்,  சில பகுதிகளில் தீக்காயங்களுடன் வீட்டின் குளியலறையில் மீட்கப்பட்டதாக வாகாஃப் பாரு தீயணைப்புத் துறை (BBP) தலைவர் நஜா நபி (Nazah Nafi) தெரிவித்தார்.

நேற்றிரவு 8.04 அளவில் தீயணைப்புத் துறைக்கு அச்சம்பவம் தொடர்பில் அவசர அழைப்பு கிடைக்கப்பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 19 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், அதற்குள் 70 சதவீதம் வீடு தீயின் கோரப்பிடியில் சிக்கியிருந்ததாகவும் நபி சொன்னார்.

இரவு 8.37-க்கு தீ முழுமையாக அணைக்கப்பட்டு, இச்சம்பவம் காவல்துறை விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!