Latest

குளுவாங்கில் கூடைப்பந்து அரங்கில் 17 வயது இளைஞன் மீது மர்ம கும்பல் தாக்குதல்; 4 பேர் கைது

குளுவாங், அக்டோபர்-13,

ஜோகூர், குளுவாங்கில் உள்ள ஒரு கூடைப்பந்து அரங்கில் 17 வயது மாணவன் காயமடையக் காரணமான கலவரம் தொடர்பில், 4 உள்ளூர் ஆடவர்கள் கைதாகியுள்ளனர்.

கடந்த வெள்ளிக்கிழமை காலை 11.15 மணியளவில் அங்கு வந்த மர்ம நபர்கள் தன்னைத் தாக்கியதாக, பாதிக்கப்பட்ட மாணவன் போலீஸில் புகார் செய்தான்.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய போலீஸார், நேற்று மதியம் வாக்கில் 19 முதல் 21 வயதிலான 4 ஆடவர்களைக் கைதுச் செய்தனர்.

கலவரத்தில் இறங்கி காயம் விளைவித்ததன் பேரில் அவர்கள் விசாரிக்கப்படுவதாக குளுவாங் போலீஸ் கூறியது.

அச்சம்பவத்தின் போது பதிவான 45 வினாடி வீடியோ முன்னதாக வைரலானது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!