Latestமலேசியா

குவாலா லங்ஙாட் சாலையோரம் வழுக்கி விழுந்து வெளிநாட்டு ஆடவர் மரணம்

குவாலா லங்ஙாட், ஜூலை-7- சிலாங்கூர், குவாலா லங்ஙாட்டில் உள்ள பள்ளியொன்றின் அருகே சாலையோரமாக வெளிநாட்டு ஆடவர் இறந்துக் கிடக்கக் கண்டெடுக்கப்பட்டார்.

30 வயது மதிக்கத்தக்க அவ்வாடவரின் சடலம் வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணியளவில் கண்டெடுக்கப்பட்டது.

சோதனையில், அவரின் தலையின் பின்பக்கம் காயம் இருந்தது கண்டறியப்பட்டது.

கால் இடறி கீழே விழுந்தவர், கால்வாயின் கங்கில் பட்டு தலையில் படுகாயமடைந்திருக்கலாம் என நம்பப்படுவதாக குவாலா லங்ஙாட் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடென்டண்ட் அஹ்மாட் ரிட்வான் மொஹமட் நோர் சாலே (Supt Ahmad Ridhwan Mohd Nor@ Saleh) கூறினார்.

அருகில் இருந்த கால்வாய் கங்கில் இரத்தக்கறை இருந்ததை வைத்து போலீஸ் அம்முடிவுக்கு வந்தது.

சம்பவ இடத்தில் தடயவியல் அதிகாரிகள் பரிசோதனை நடத்தியதிலும், கல் போன்ற ஏதோ கூர்மையற்ற பொருளில் மோதியதே, இறந்தவரின் தலையிலிருந்த காயத்திற்குக் காரணம் என உறுதியானது.

சம்பவ இடத்தருகே சோதனையிட்டதில், சந்தேகத்திற்குரிய பொருளோ ஆயுதமோ கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே அவரின் மரணத்தில் குற்ற அம்சங்கள் எதுவும் இல்லையெனக் கருதி, திடீர் மரணமாக அதனை போலீஸ் வகைப்படுத்தியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!