Latestஉலகம்விளையாட்டு

கோபா அமெரிக்கா காற்பந்தாட்டம் ; இரசிகர்களின் மோதலால் 30 நிமிடம் ஒத்தி வைப்பு

மியாமி, ஜூலை 15 – அமெரிக்கா, மியாமியில் நடைபெற்ற, அர்ஜெண்டினாவுக்கும், கொலம்பியாவுக்கும் இடையிலான கோபா அமெரிக்கா இறுதியாட்டத்தின் “கிக்-ஆப்” ஆட்டத்தின் போது, அரங்கத்திற்கு வெளியே இரசிகர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதால், ஆட்டம் 30 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

அதனால், ஹார்ட் ராக் அரங்கில், ஆட்டத்தை தொடங்க தயார் நிலையில் இருந்த இரு அணி ஆட்டக்காரர்களும் மீண்டும் தயார்நிலை அறைக்கு திரும்பியதாக, ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

உள்நாட்டு நேரப்படி, இரவு 8.30 வாக்கில் தொடங்கவிருந்த அவ்வாட்டம் 30 நிமிடம் தாமதப்படுத்தப்பட்டது.

அவ்வாட்டத்தை காண டிக்கெட்டுகளை வாங்காத இரசிகர்கள், முந்தியடித்துக் கொண்டு அரங்கில் நுழைய முற்பட்ட போது, அங்கு பணியில் இருந்த போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையில் கைகலப்பு மூண்டது.

அதனால், காயமடைந்த சில இரசிகர்களுக்கு, மருத்துவ குழுவினர் முதலுதவிகளை வழங்கியதாகவும் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!