Latestமலேசியா

சபாவில் ரோட்டா வைரஸ் பாதிப்பு ; 191 பேர் வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சலுக்கு இலக்காகினர்

கோத்தா கினபாலு, ஜூன் 17- சபா, டெனுமில் (Tenom), 191 பேர் ரோட்டா சைரஸ் பாதிப்புக்கு இலக்காகி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இம்மாதம், இரண்டாம் தேதி தொடங்கி, அவர்கள் அனைவரும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு மற்றும் வாந்திக்கு இலக்காகியுள்ளனர்.

டெனோம் மாவட்டத்தில், ஒரே அறிகுறியுடன் பலர் பாதிக்கப்பட்டிருப்பது தொடர்பில், இம்மாதம் ஆறாம் தேதி புகார் செய்யப்பட்டதாக, சபா மாநில சுகாதாரத் துறை இயக்குனர் டத்தோ டாக்டர் அசிஸ்த் சன்னா (Asits Sanna) தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து, டெனோம் மாவட்ட சுகாதார துறை மேற்கொண்ட தொடர் கண்காணிப்பு வாயிலாக, ரோட்டா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டதாக, அசிஸ்த் சொன்னார்.

மாசடைந்த நீர் அல்லது உணவு வாயிலாக, அந்த வைரஸ் தொற்று பரவி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

குறிப்பாக, இம்மாதம் இரண்டாம் தேதி தொடங்கி 13-ஆம் தேதி வரையில், மொத்தம் 191 பேர் ரோட்டா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில் 154 பேர் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்ற வேளை ; 37 பேர் மேல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களின் நிலை சீராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெனோம் மாவட்டத்தில் ரோட்டா வைரஸ் பரவல் கண்டறியப்பட்டுள்ளதை அடுத்து, அங்கு கண்காணிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதையும், அசிஸ்த் அறிக்கை ஒன்றின் வாயிலாக உறுதிப்படுத்தினார்.

குறிப்பாக, நீர் சுத்திகரிப்பு ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!