
கோலாலம்பூர், ஜூன்-16 – கோலாலம்பூர், கிளாங் லாமா சாலையில்
வாகன சர்வீஸ் மையத்தின் மூன்றாம் மாடியிலிருந்து கார் கீழே விழுந்ததில், அதிலிருந்த கார் கழுவும் பணியாளர் படு காயமடைந்தார்.
நேற்று மாலை 5.38 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக,
கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமுலாக்கப் பிரிவு தலைவர் முஹமட் சம்சுரி முஹமட் ஈசா கூறினார்.
23 வயது அவ்விளைஞர் Toyota Camry காரைச் கழுவி முடித்த பின்பு, மூன்றாவது மாடியில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் அதை நிறுத்த முயன்றார்;
ஆனால் பிரேக்கிற்கு பதிலாக தவறுதலாக அவர் எண்ணெயை அழுத்தியதால், கார் சுவற்றை மோதி கீழே வந்து விழுந்தது.
கீழே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த Proton Iriz மற்றும் Perodua Myvi கார்கள் மீது அந்த Toyota கார் விழுந்தது.
எனினும் அக்கார்களினுள் அப்போது யாரும் இல்லை.
காயமடைந்த பணியாளர் மலாயாப் பல்கலைக்கழக பருத்துவ மையத்தின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.