Latestமலேசியா

ஜெரண்டூடில் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்தில் மோதியதில் தந்தையும் மகனும் மரணம்

ஜெரண்டூட் , ஜூலை 23 – நால்வர் சென்ற மோட்டார் சைக்கிளோன்று மின் கம்பத்தை மோதியதைத் தொடர்ந்து அதனை ஓட்டிச் சென்ற தந்தையும் 6 வயது மகனும் உயிரிழந்தனர். ஜாலான் ஜெரண்டூட் ( Jalan Jerantut) -தெமர்லோவில் Kampung Bukit Ketupat முச்சந்திக்கு அருகே நேற்றிரவு மணி 8. 30 அளவில் நிகழ்ந்த அந்த விபத்தில் 43 வயதுடைய முகமட் அப்துல்லா சனி ( Muhamad Abdullah Sani) மற்றும் அவரது மகன் ( Aisy Afnan) மரணம் அடைந்தனர். அந்த விபத்தில் அப்துல்லாவின் மனைவியான 28 வயதுடைய முனிரா மாமுட் (Munirah Mahmood) மற்றும் மற்றொரு 4 வயது மகன் Muhammad Umar Affan ஆகியோர் காயம் அடைந்தனர்.

முனிராவின் தாயாரை பார்த்துவிட்டு அந்த நால்வரும் வீடு திரும்பும்போது அவர்களது மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியதாக Jerantut மாவட்ட போலீஸ் தலைவர் Superintendan Zuki Muhammad தெரிவித்தார். ஜெரண்டூட்டிலிருந்து தெமர்லோ சென்ற அவர்களது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் இடது புறத்தில் கவிழ்ந்து சாலையோரத்தில் இருந்த மின் கமபத்தில் மோதியதாக Zuki Muhammad வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!