Latestமலேசியா

ஜோகூர், இஸ்கண்டார் புத்ரியில் பள்ளிக்குள் புகுந்த குரங்கு; பதம் பார்த்ததில் மாணவன் காயம்

இஸ்கண்டார் புத்ரி, ஜூலை 27 – ஜோகூர் இஸ்கண்டார் புத்ரியில் இடைநிலைப் பள்ளியொன்றில் புகுந்த குரங்கு தாக்கியதில் 13 வயது மாணவன் காயமடைந்தான்.

இதையடுத்து அவன் உடனடியாக கிளினிக்கில் சேர்க்கப்பட்டான்.

சிகிச்சைக்குப் பிறகு மாணவனது உடல்நிலை சீராக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

ஜோகூரில் வார இறுதி பள்ளி விடுமுறை நாளான நேற்று மதியம் அச்சம்பவம் நிகழ்ந்தது.

தகவல் கிடைத்து சம்பவ இடம் விரைந்த தீயணைப்பு மீட்புத் துறை, அக்குரங்கைப் பிடித்து வனவிலங்கு மற்றும் தேசியப் பூங்கா துறையான பெர்ஹிலிதனிடம் (PERHILITAN) ஒப்படைத்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!