Latestமலேசியா

தஞ்சோங் ரம்புத்தானில் கார் தீப்பற்றி எரிந்த இடத்தில் இரத்தக் கறையுடன் மனித கை கண்டெடுப்பு

ஈப்போ, ஜூன்-24, பேராக், ஈப்போவில் கார் தீப்பற்றி எரிந்த இடத்தில் இருந்து துண்டான மனித கை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தஞ்சோங் ரம்புத்தான், உலு கிந்தா பஹாகியா மருத்துவமனைக்கு முன்புறம் ஞாயிற்றுக்கிழமை அச்சம்பவம் நிகழ்ந்தது.

இரத்தத் கறையோடு அந்த இடது கை சாலையில் கிடந்ததை தீயணைப்பு வீரர்கள் கண்டெடுத்தனர்.

எனினும் மற்ற உடல் பாகங்கள் எதுவும் அங்கு காணப்படவில்லை.

Toyota Vios கார் 95% எரிந்துப் போன நிலையில், அங்கு மேலும் 2 கார்கள் விட்டுச் செல்லப்பட்டிருந்தன.

இந்நிலையில், சம்பவத்திற்கு முன்பாக, போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பகுதித் தொடர்பில் அங்கு கும்பலொன்று சண்டையில் ஈடுபட்டிருக்கிறது.

முகமூடி அணிந்திருந்த 20 ஆசாமிகள் மூவரைத் தாக்கி விட்டு, காருக்கும் தீ வைத்து விட்டு தப்பியோடியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

படுகாயமடைந்த 3 உள்ளூர் ஆடவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் வேளை, 3 சந்தேக நபர்கள் விசாரணைக்காகக் கைதாகியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!