Latestமலேசியா

தாமான் ஸ்ரீ மூடாவில் ஐஸ்கிரிம் கடையில் கொள்ளை; பெண் ஊழியருக்கு கத்தித் குத்து

ஷா அலாம், ஆக 13 – ஷா அலாம் , தாமான் ஸ்ரீ மூடாவில் (Taman Sri Muda) ஐஸ்கிரிம் கடையில் நிகழ்ந்த கை கலப்பில் அங்குள்ள பெண் ஊழியர் கத்திக் குத்துக்கு உள்ளானார். நேற்று காலை மணி 11.30 அளவில் நிகழ்ந்த அந்த கொள்ளைச் சம்பவத்தில் முகமூடி அணிந்த ஆடவன் ஒருவன் அப்பெண்ணை காகிதம் வெட்டும் கத்தியால் குத்தியுள்ளான். கடையில் வேலை செய்யும் மற்றொரு ஊழியருக்காக அந்த பெண் காத்திருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. தன்னை தாக்க முயன்ற கொள்ளையனை தடுக்க முயன்றபோது அவன் மிகவும் முரட்டுத்தனமாக செயல்பட்டுள்ளான்.

இதனால் கையில் காயம் அடைந்த அப்பெண் ஷா அலாம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டுச் செல்லப்பட்டார். எனினும் இந்த சம்பவத்தில் அந்த ஐஸ்கிரிம் கடையிலிருந்து எதுவும் கொள்ளையடிக்கப்படவில்லை. அங்கிருந்து தப்பியோடிய சந்தேகப் பேர்வழியை தீவிரமாக தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஷா அலாம் மாவட்ட போலீஸ் தலைவர் துணை கமிஷனர் முகமட் இக்பால் ( Mohd Iqbal Ibrahim) தெரிவித்தார். அதோடு இந்த கொள்ளை சம்பவம் அந்த ஐஸ்கிரிம் கடையின் ரகசிய கண்காணிப்பு கருவியில் உள்ள காணொளியில் பதிவாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!